×

வண்டலூரில் பள்ளி மாணவி வயிற்றில் கார் ஏற்றி சாகசம்

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி விரிவு பகுதியில் இந்தியன் டைகர் டாங்-சூ-டு கராத்தே பள்ளி உள்ளது. இதன் சார்பில், சாகசம் நிகழ்ச்சி அதன் ஒருங்கிணைப்பாளர் டைகர் விஜயகுமார் தலைமையில் ஓட்டேரியில் உள்ள சமுதாயக்கூடம் அருகில் நேற்று மாலை நடந்தது. இதில் கராத்தே பள்ளியில் பயிற்சி பெற்று வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் தனியார் பள்ளியை சேர்ந்த பிளஸ்1 மாணவி ரக் ஷயா ஆணி பலகையில் படுத்து வயிற்றில் கார் ஏற்றி சாகசம் படைத்தார். அப்போது சாகசம் படைத்த மாணவிக்கு பயிற்சி ஆசிரியர்கள், சக மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

The post வண்டலூரில் பள்ளி மாணவி வயிற்றில் கார் ஏற்றி சாகசம் appeared first on Dinakaran.

Tags : School ,Kuduvancheri ,Otteri ,Vandalur Panchayat ,Chengalpattu District ,Katgangolatur Union ,Tang- ,Du ,Vandalur ,Dinakaran ,
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை